Site icon Manakkum Samayal | South Indian Recipes

முடக்கத்தான் கீரை – மருத்துவ குணங்கள்

Mudakathan_Keerai

முடக்கத்தான் கீரை வேலிகளில் செடியாக வளர்ந்து கிடக்கும், துவர்ப்புச் சுவையுடைய வகைக் கீரை. இந்த கீரை பல மருத்துவகுணங்கள் அடங்கியே ஒரு அற்புதமான கீரை. முடக்கத்தான் கீரையின் தண்டு, இலை எல்லாவற்றையுமே பயன்படுத்தலாம். இந்த கீரையை எப்படி சமைத்து உண்ணலாம் மற்றும் அதனின் மருத்துவ குணாதிசயங்களையும் கிழே பார்க்கலாம்.

துவையல்

முடக்கத்தான் கீரை கொண்டு துவையல் செய்யல்லாம். இலைகளை ஆய்ந்து, எண்ணெயில் வதக்கி உப்பும்,காய்ந்த மிளகாயும் சேர்த்துத் அரைத்துத் தொடு கூட்டாக துவையல் செய்து சாப்பிட சுவையாக இருக்கும்.

பொரியல்

கீரையை பொடியாக நறுக்கி, வேகவைத்து அதில் தோலுரித்த சிறிய வெங்காயம் பாதியாக வெட்டி கொஞ்சம் எண்ணையில் வதக்கி பொரியல் செய்தும் சாப்பிடலாம்.

ரசம்

முடக்கத்தான் கீரை பொடியாக நறுக்கி, கொடியை மிளகு, சீரகத்துடன் சேர்த்து சுவையான ரசம் வைக்கலாம். இது உடலுக்கு மிகவும் நல்லது.

கூட்டு

கீரையை பொடியாக நறுக்கி, துவரம் பருப்பு, பாசிப்பருப்பு மற்றும் மற்ற பருப்புகளுடன் சேர்த்து இந்தக் கீரையில் கூட்டும் செய்யலாம்.

மாவை புளிக்க வைக்க

முடக்கத்தான் கீரை அடை செய்வதற்கும், தோசை மாவை புளிக்க வைப்பதற்கும் இந்தக் கீரை அரைத்துச் சேர்த்தால். மாவு சீக்கிரம் புளித்து விடும். இந்த கீரையை அடையில் அதிகமா சேர்த்தால், அடை இன்னும் சுவையாக இருக்கும்.

முடக்கத்தான் கீரை மருத்துவ குணங்கள்

இந்த கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளன. முடக்கத்தான் கீரை உணவில் தொடர்ந்து சேர்த்துக்கொள்வதன் மூலம் மூல நோய், மலச்சிக்கல், கரப்பான், கிரந்தி, பாதவாதம் போன்ற பல நோய்கள் குணமடையும்.

இந்தக் கீரையை விளக்கெண்ணெயில் வதக்கி உண்டால் கைகால் வலி, மூட்டுவலி, முதுகு வலி, உடல் வலி ஆகிய அனைத்து வலிகளும் பறந்து போகும். மூட்டுகளில் தங்கி இருக்கும் புரதம்,யூரிக் அமிலம், சுண்ணாம்பு, பாஸ்பரஸ், மற்றும் கொழுப்புத் திரட்சி படிவங்களை கரைத்து, வலிகளை போக்க வகை செய்யும்.

சாறு எடுக்கும் முறை : இஞ்சி சிறய துண்டு, பூண்டு நான்கு பல், சின்ன வெங்காயம் ஒன்று, சீரகம் அரை தேக்கரண்டி, மிளகு அரைத்தேக்கரண்டி இவைகளை கொஞ்சம் எண்ணெய் விட்டு நன்கு வதக்கி எடுக்கவேண்டும்.பிறகு அதில் இரண்டு குவளை நீர் ஊற்றி நன்றாக வேக வைக்கவேண்டும். கீரை நல்லா வெந்து அதன் சாரம் இறங்கிய பிறகு வடிகட்டி எடுத்தால் கீரையின் சாறு தயார். மூட்டுகளில் தங்கிய எல்லா வலிகளும் கரைந்து வலி இருந்த சுவடே இல்லாமல் மறைந்து விடும். நாற்பது வயது தொடங்கியவர்கள் இந்த கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வருவது நல்லது. முதுகு தண்டுவடம் தேய்மானம் இருப்பவர்கள், மாதவிலக்கு நின்ற பிறகு பெண்களுக்கு ஏற்படும் எலும்புத் தேய்மானம் மற்றும் எல்லாவிதமான மூட்டுவாதம், மூட்டுவலிகளைக் இந்த கீரை குணப்படுத்தும்.

முடக்கத்தான் கீரை வெல்லம் சேர்த்து கொஞ்சம் நெய்யில் வதக்கி உட்கொண்டால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.

இந்தக் கீரையை அரைத்து அதன் சாற்றைக் காதில் விட்டால் காது வலி நிற்கும்.

கட்டிகளில் மேல் இந்த கீரையை வைத்து கட்டினால் அவை உடைந்து புண் ஆறும்.

வாய்வுத் தொல்லையுடையவர்கள் முடக்கத்தான் கீரையை சாப்பிட்டால் வாய்வுத் தொல்லை நீங்கும்.

மாதவிடாய் நிற்கும் நிலையில் உள்ள பெண்களுக்கு இந்தக் கீரை மிக்க நல்லது. இந்தக் கீரையின் சாறு ஒரு மேஜைக்கரண்டி போதும் பெண்களின் மாதவிடாய் தொடர்பான பிரச்னைகளுக்கு போக்கும்.

முடக்கத்தான் கீரை அரைத்து அடிவயிற்றில் கட்டினால் கர்ப்பிணிப் பெண்களுக்கு சுகப்பிரசவமாகும்.

இந்த கீரையை சாப்பிடத் தொடங்கும்போது முதல் ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு சிலருக்கு மலம் பேதி போன்று போகும். ஆனால் அதற்காக பயப்படத் தேவையில்லை. தொடர்ந்து சாப்பிடலாம் இந்த கீரையால் நலம் பெறலாம்.

Click here to check out website.

Check our Youtube Channel here

Exit mobile version